நண்பர் ஒருத்தர், இவ்வளவு நாள் சென்னையில் இருக்கிறாயே என்ன கற்றுக் கொண்டாய் எனக் கேட்டார். அவருக்கு நான் உடனடியாக ஒற்றை வரியில் பதிலைச் சொல்லி விட்டேன். அது என்னவென்று சொல்வதற்கு முன்பாக இன்னொரு நண்பரைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது.
அந்த நண்பர் ஒரு அப்பாவி. அவருடைய குடும்பத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை. அவருடைய பிரச்சினையெல்லாம் சுற்றத்தினர்தான். நண்பரிடம் தொலைபேசி செய்து எந்த உதவி கேட்டாலும் இல்லை என்று சொல்லவே மாட்டார். பண்ணிடலாம், சிறப்பா செஞ்சிடலாம் என்பார். அதற்காக ...அவர் பல்வேறு வகைகளில் மெனக்கெடுவார். அவரையும் மீறி அவர் பிறருக்காக ஒத்துக் கொண்ட பணிகளை முடிக்க முடியாத நிலையில், கடுமையான மன அழுத்தத்திற்கும் உள்ளாவார். அந்தப் பணியை அவரிடம் ஒப்படைத்தவர்களில் பெரும்பாலான பேர்களிடம் அவர் அது சம்பந்தமாக கெட்ட பெயரையே பெற்றிருக்கிறார். அவரால் எதையும் எதற்காகவும் மறுத்துப் பேச முடியாது. முகதாட்சண்யம் பார்க்க வேண்டியிருக்கிறதே என்பார் அப்பாவியாய். ஒருகட்டத்தில் இந்தப் பிரச்சினையின் நிமித்தமாக அவர் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டார். சிலருக்கு உதவி செய்ய வேண்டி கடன் சுழலிற்குள்ளும் மாட்டிக் கொண்டார். இது தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. நம்மால் எல்லாமே முடியும் என்கிற நிலையைத் தாண்டி, நம்மால் என்ன செய்ய முடியும் என்கிற இடத்திற்கு நகர்வது மிக முக்கியமானது. நம்முடைய காலணியின் அளவு நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒருமுறை கலைஞரிடம் நீங்கள் பிரதமராவதில் என்ன தடையிருக்கிறது என்று கேட்டபோது, அவர் உடனடியாகச் சொன்ன பதில், “என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்”. அந்தத் தெளிவைப் பெறுவதற்காகத்தான் ஆண்டாண்டு காலம் உழைக்க வேண்டியிருக்கிறது.
அந்த நண்பர் ஒரு அப்பாவி. அவருடைய குடும்பத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை. அவருடைய பிரச்சினையெல்லாம் சுற்றத்தினர்தான். நண்பரிடம் தொலைபேசி செய்து எந்த உதவி கேட்டாலும் இல்லை என்று சொல்லவே மாட்டார். பண்ணிடலாம், சிறப்பா செஞ்சிடலாம் என்பார். அதற்காக ...அவர் பல்வேறு வகைகளில் மெனக்கெடுவார். அவரையும் மீறி அவர் பிறருக்காக ஒத்துக் கொண்ட பணிகளை முடிக்க முடியாத நிலையில், கடுமையான மன அழுத்தத்திற்கும் உள்ளாவார். அந்தப் பணியை அவரிடம் ஒப்படைத்தவர்களில் பெரும்பாலான பேர்களிடம் அவர் அது சம்பந்தமாக கெட்ட பெயரையே பெற்றிருக்கிறார். அவரால் எதையும் எதற்காகவும் மறுத்துப் பேச முடியாது. முகதாட்சண்யம் பார்க்க வேண்டியிருக்கிறதே என்பார் அப்பாவியாய். ஒருகட்டத்தில் இந்தப் பிரச்சினையின் நிமித்தமாக அவர் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டார். சிலருக்கு உதவி செய்ய வேண்டி கடன் சுழலிற்குள்ளும் மாட்டிக் கொண்டார். இது தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. நம்மால் எல்லாமே முடியும் என்கிற நிலையைத் தாண்டி, நம்மால் என்ன செய்ய முடியும் என்கிற இடத்திற்கு நகர்வது மிக முக்கியமானது. நம்முடைய காலணியின் அளவு நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒருமுறை கலைஞரிடம் நீங்கள் பிரதமராவதில் என்ன தடையிருக்கிறது என்று கேட்டபோது, அவர் உடனடியாகச் சொன்ன பதில், “என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்”. அந்தத் தெளிவைப் பெறுவதற்காகத்தான் ஆண்டாண்டு காலம் உழைக்க வேண்டியிருக்கிறது.

No comments:
Post a Comment