Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Sunday, 7 January 2018

Basic Unit Conversion - Every Civil Engineer Must Know

    CONCRETE GRADES:
    M5 = 1:4:8
    M10= 1:3:6
    M15= 1:2:4
    M20=  1:1.5:3
    M25= 1:1:2
CLEAR COVER TO MAIN REINFORCEMENT:
1.FOOTINGS : 50 mm
2.RAFT  FOUNDATION.TOP : 50 mm
3.RAFT FOUNDATION.BOTTOM/SIDES : 75 mm
4.STRAP BEAM  : 50 mm
5.GRADE SLAB : 20 mm
6.COLUMN : 40 mm
7.SHEAR WALL : 25  mm
8.BEAMS : 25 mm
9.SLABS : 15 mm
10.FLAT SLAB : 20 mm
11.STAIRCASE  : 15 mm
12.RET. WALL : 20/ 25 mm on earth
13.WATER RETAINING STRUCTURES :  20/30 mm

WEIGHT OF ROD PER METER LENGTH:
DIA WEIGHT PER METER
6mm = 0.222Kg
8mm = 0.395 Kg
10mm = 0.616 Kg
12mm = 0.888  Kg
16mm = 1.578 Kg
20mm = 2.466 Kg
25mm = 3.853 Kg
32mm = 6.313  Kg
40mm = 9.865 Kg
1bag cement-50kg
1feet-0.3048m
1m-3.28ft
1sq.m-10.76sq.f t
1cu.m-35.28cu.ft
1acre-43560sq.ft
1hectare-2.47acre

DESIGN MIX:
M10 ( 1 : 3.92 : 5.62)
Cement : 210 Kg/ M 3
20  mm Jelly : 708 Kg/ M 3
12.5 mm Jelly : 472 Kg/ M 3
River sand : 823 Kg/ M  3
Total water : 185 Kg/ M 3
Fresh concrete density: 2398 Kg/M 3
M20 ( 1 : 2.48 :  3.55)
Cement : 320 Kg/ M 3
20 mm Jelly : 683 Kg/ M 3
12.5 mm Jelly :  455 Kg/ M 3
River sand : 794 Kg/ M 3
Total water : 176 Kg/ M  3
Admixture : 0.7%
Fresh concrete density: 2430 Kg/ M 3
M25 ( 1 : 2.28 :  3.27)
Cement : 340 Kg/ M 3
20 mm Jelly : 667 Kg/ M 3
12.5 mm Jelly :  445 Kg/ M 3
River sand : 775 Kg/ M 3
Total water : 185 Kg/ M  3
Admixture : 0.6%
Fresh concrete density: 2414 Kg/ M 3
Note: sand 775  + 2% moisture, Water185 -20.5 =
164 Liters,
Admixture = 0.5% is  100ml
M30 ( 1 : 2 : 2.87)
Cement : 380 Kg/ M 3
20 mm Jelly : 654 Kg/ M  3
12.5 mm Jelly : 436 Kg/ M 3
River sand : 760 Kg/ M 3
Total water :  187 Kg/ M 3
Admixture : 0.7%
Fresh concrete density: 2420 Kg/ M 3
Note:  Sand = 760 Kg with 2% moisture
(170.80+15.20)

STANDARD CONVERSION FACTORS
INCH = 25.4 MILLIMETRE
FOOT =  0.3048 METRE
YARD = 0.9144 METRE
MILE = 1.6093 KILOMETER
ACRE = 0.4047  HECTARE
POUND = 0.4536 KILOGRAM
DEGREE FARENHEIT X 5/9 – 32 =  DEGREE
CELSIUS
MILLIMETRE= 0.0394 INCH
METRE = 3.2808FOOT
METRE =  1.0936YARD

MATERIAL CALCULATION:
CEMENT IN BAGS
01. PCC 1:5:10 1440/5*0.45 129.60Kg 2.59
02. PCC 1:4:8(M 7.5)  1440/4*0.45 162.00Kg 3.24
03. PCC 1:2:4(M 15) 1440/2*0.45 324.00Kg  6.48
04. PCC 1:3:6(M 10) 1440/3*0.45 216.00Kg 4.32
05. RCC 1:2:4(M 15)  144/2*0.45 324.00Kg 6.48
06. RCC 1:1.5:3(M 20) 1440/1.5*0.45  32.00Kg 8.64
07. RCC 1:1:2(M 25) 370.00Kg  7.40
08. RCC M 30 410.00Kg 8.20
09. RCC M35 445.00Kg 8.90
10. RCC M40  480.00Kg 9.60
11. Damp Proof Course CM 1:3,20mm tk 1440/3*0.022 10.56Kg  0.21
12. 2″tk precast slab M15 324*0.05 16.20Kg 0.32
13. 3″tk precast slab  M15 324*0.075 24.30Kg 0.49
14. GC Masonry CM 1:7 1440/7*0.34  70.00Kg1.40
15. Brick Work CM 1:6 1440/6*0.25 60.00Kg 1.20
16. Brick  Work CM 1:4, 115tk 1440/4*0.25*0.115 10.35Kg 0.21
17. Grano Flooring CC  1:1.5:3 1440/1.5*0.45*0.05 21.60Kg 0.43
18. Plastering CM 1:3, 12mm tk  1440/3*0.014 6.72Kg 0.13
19. Wall Plastering CM 1:4, 12mm tk  1440/4*0.014 5.00Kg 0.10
20. Laying Pressed Tiles Over
a CM 1:4, 20mm tk  1440/4*0.022 7.92Kg 0.16
01. Any Concrete Work
(PCC, RCC) 0.45*35.315= 20.00
02. Damp  Proof Course
CM `1:3, 20mm tk 1.00
03. 2″tk Precast slab M15 1.00
04.  3″tk Precast slab M15 1.50
05. SS Masonry in CM 1:7 15.00
06. Brick Work  in CM 1:6 15.00
07. Brick Work in CM 1:4,115mm tk 2.00
08. Grano Flooring  in CC 1:1.5:3 1.00
09. Plastering in CM 1:3, 12mm tk 1.00
10. Wall  Plastering CM 1:4, 12mm tk 1.00
11. Laying Pressed Tiles over a CM 1:4, 20mm  tk
1.00
12. Ceramic Tiles, Marble, Granite, Cuddapah slab
CM 1:4, 20mm  tk 1.00

UNIT WEIGHT:
01. Concrete 25 kN/m3
02. Brick 19 kN/m3
03.  Steel 7850 Kg/m3
04. Water 1000 Lt/m3
05. Cement 1440 Kg/m3
06. 1Gallon  4.81 Litres
07. Link 8″ = 200mm
08. 1 Hectare 2.471 acr(10000m2)
09. 1  Acr 4046.82m2 = 100 cent

DEVELOPMENT LENGTH:
01. Compression 38d
02. Tension 47 &  60d
03. 1 Cent 435.60 Sft
04. 1 Meter 3.2808 ft
05. 1 M2 10.76  ft2
06. 1 Feet 0.3048m
07. 1 KN 100Kg
08. 1kN 1000N
09. 1 Ton 1000Kg  = 10,000 N = 10 kN
10. 1 kG 9.81N

BRICK:
Weight = 3.17 – 3.80 Kg
Water absorption 12 to  15%
Compressive strength = 36Kn/cm2
230mm Wall/m3 = 460 Bricks + 20Cft  Sand +
66Kg Cement
There are many basics civil engg fact which i will be adding more in the future

Thursday, 27 April 2017

Know about Bio-Technology..உயிரி தொழில்நுட்பவியல் துறை படிப்புகள்...சர்வதேச வேலை வாய்ப்புகள்!

உயிரி தொழில்நுட்பவியல் துறை படிப்புகள்...சர்வதேச வேலை வாய்ப்புகள்!

உயிரின வகைகளின் பரிணாம வளர்ச்சி குறித்த பல கேள்விகளுக்கு, பல்துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுநர்களால் கூட சொல்ல முடியாத பல விடைகளைத் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் ஆய்வுகள் மூலம் கண்டறிந்து சொல்லியிருக்கின்றனர்.

தாவரவியல் துறை மேம்படுத்தப்பட்ட பின்னர் தொடர்புடைய துறைகளாக உயிரி தொழில்நுட்பவியல் (பயோ டெக்னாலஜி), நுண்ணுயிரியியல் (மைக்ரோ பயாலஜி) துறைகள் படிப்புகள் இன்று மாணவர் மத்தியில் விருப்பப் பாடங்களாக கற்பிக்கப்பட்டு வருகின்றன.

என்றாலும், மாணவர்கள் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கும் கல்லூரிகளில் சிறந்த ஆய்வுக்கூடங்கள் உள்ளனவா, பாடத்திட்டங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளனவா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

கடந்த 20 ஆண்டுகளாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பலவற்றில் பாடத்திட்டங்களாக கொண்டு வரப்பட்டுள்ளன. இத்துறைகளில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) அளிக்கும் மானியங்கள் மூலம் பல செயல்முறைத் திட்டங்களை செயல்படுத்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதுகலை மட்டுமின்றி, ஆராய்ச்சிப் படிப்பு மற்றும் முனைவர் படிப்பு முடித்தவர்களுக்கு அயல்நாட்டு நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இதுகுறித்து திருச்சி தேசியக்கல்லூரியின் உயிர்தொழில் நுட்பத்துறைத் தலைவர், பேராசிரியர்  எம்.என். அபுபக்கர் கூறியது:

"தாவரவியல் துறையில், இளங்கலைப் பாட வகுப்புகள் மற்றும் முதுநிலைப் பாட வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு, அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்களை எவ்வாறு திசு வளர்ப்பு முறையின் மூலம் பாதுகாக்க முடியும் என பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தவிர, தாவரங்களின் மருத்துவப் பயன்கள் குறித்து எத்தனையோ குறிப்புகள் இருந்தாலும், மருத்துவப் பயன் அறியப்படாத தாவரங்களை இனம் கண்டுகொள்வது, அவற்றின் மருத்துவப் பொருள்களைக் கண்டறிவது, இந்த மருந்துப் பொருள்களை மருத்துவரீதியில் எவ்வாறு பயன்படுத்துவது போன்ற பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றன.

மேலும் இத்துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு பல நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பொதுவாக தாவரவியல், உயிரி தொழில்நுட்பவியல், நுண்ணுயிரியியல் துறைகளில் பயிலும் மாணவர்கள் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) மற்றும் முனைவர் பட்டம் (பி.எச்டி) என தொடர்ந்து முதுநிலைப் பட்டங்களைப் பெறுவதன் மூலம் இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

எடுத்துக்காட்டாக, யுனெஸ்கோ, வேர்ல்டு ஹெரிடேஜ் பண்ட்( டபிள்யூ.எச்.எப்), குளோபல் என்விரோமென்டல் பெசிலிட்டி (ஜி.இ.எப்), எப்.ஏ.ஓ., டபிள்யூ.டபிள்யூ.ஓ., ஐ.யூ.சி,என்., உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளதாக அறிவித்துள்ளன. அவை பரந்து விரிந்த உலகின் பல்வேறு பகுதிகளிலும் அழிவின் விளிம்பிலுள்ள தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை மீட்டு பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதற்காக இத்துறைகளில் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்ற ஏராளமான இளையோருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கவும் தயாராக உள்ளன.

எனவே, மாணவர்கள் இத்தகைய நிறுவனங்களை அணுகி அவர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய முடியும். மேலும் மருந்து நிறுவனங்கள், மருந்துகள் கண்டுபிடிப்பு, அதன் பயன்கள் பற்றிய ஆராய்ச்சிகள், உணவு மற்றும் பால்வளத் துறைகளில் நுண்ணுயிரியியல் மற்றும் உயிரிதொழில் நுட்பவியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.

தாவரவியல், உயிரிதொழில் நுட்பவியல், நுண்ணுயிரியியல் துறைகளில் படிப்பை முடித்த மாணவர்கள் பல உயரிய நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

Thanks : Dinamani -25/04/2017

Saturday, 22 April 2017

உலகம் வியக்கும் முஸ்லிம் விஞ்ஞானிகள்...

பெயர்:- முஹம்மது இப்னு ஜக்கரிய்யா அல் ராஸி (ஆங்கிலத்தில் ரேஜஸ் - Rhazes or Rasis  என்றழைக்கப்படுகிறார்.)

வாழ்ந்த காலம்: (கி.பி.864-930)

சிறப்புகள்:-சின்னம்மை,பெரியம்மை நோய்களுக்கான வேறுபாடுகளை விளக்கிய,அறுவைச் சிகிச்சைக்கு மயக்க மருந்தை பயன்படுத்திய உலகின் தலைசிறந்த முதல் மருத்துவர்.

நன்றி:Islam Ashiq

குறிப்பு:முஸ்லிம் விஞ்ஞானிகள்,அவர்தம் அரிய கண்டுபிடிப்புகள்,இஸ்லாமிய விஞ்ஞான பொற்காலம் ஆகியவற்றின் தகவல்களை கீழே தொகுத்துள்ளேன்.

ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியிலிருந்து ஐரோப்பிய மறுமலர்ச்சி வரையிலான காலக்கட்டத்தையே 'மத்தியக் காலம்' என்று அழைக்கிறார்கள். இதை சில வரலாற்றாசிரியர்கள் 'இருண்ட காலம்' என குறிப்பிட்டிருக்கிறார்கள். உண்மையில் அது ஐரோப்பியர்களுக்குத்தான் இருண்ட காலமாக இருந்தது. அதே காலத்தில் இஸ்லாமிய சமூகம் விஞ்ஞானத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தது. ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் அந்தக் காலத்தில்தான் முஸ்லிம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் பட்டன.
13 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இக்குறும்படம் '1001 Inventions' என்ற அமைப்பின் சார்பில் தயாரிக்கப் பட்டுள்ளது. இதுவரை பல சர்வதேச விருதுகளையும் இப்படம் வென்றிருக்கிறது.


கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பற்றிய சிறிய தகவல்

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களைப் பற்றி News 7 நிகழ்ச்சியில் அழகாகப் பேசிய சிறுமி சம்யுக்தா அவர்களுக்கு பாராட்டுக்கள்.  

தங்களை முன்னிலைப்படுத்தவும், முகவரி தேடவும், கையூட்டு பெறவும் காயிதே மில்லத் சரித்திரத்தை திரிபுவாதம் செய்து தவறான தகவல்களுடன் ஆவணப்படம் வெளியிடுபவர், எழுதுவர்கள் மத்தியில் உண்மையை உரக்கச் சொல்லும் சிறுமிக்கும் குமரி அனந்தனுக்கும் இதயப்பூர்வ நன்றிகள்.  
வாழ்த்துக்கள்.




Employment & Educational Bi-Weekly Edition

Saturday, 3 September 2016

National Scholarship Exam (NSE) - 2016

National Scholarship Exam (NSE) - 2016

நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வு

The NSE Examination is based on a Multiple Choice Questions pattern which will help Student to be more precise & careful while attempting the questions. The questions and the marking scheme are designed in such a way that a student can develop decision making ability and the reasoning power.

பிரதிபா கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கேரியர் எஜூகேஷன், நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: அப்ஜெக்டிவ் அடிப்படையில் எழுத்து தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு: பொது அறிவு, கணிதம் மற்றும் சமூக அறிவியல்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30

மேலும் விவரங்களுக்கு: www.niceedu.org

http://www.niceedu.org/scholarship.html

நன்றி : கல்விமலர்

Wednesday, 31 August 2016

Scholarship Alert_31.08.2016

Please have a look into the below post.
Two scholarships for girl students
1. For minority Girls and
2. For Single Girl Child.

Please apply and share to the required person to get benefited. Thanks

Saturday, 27 August 2016

கல்வி என்றால் என்ன?

கல்வி என்றால் என்ன ?

ஒருவர் இந்த உலகில் பெறுகிற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வி எனப்படும். ஒருவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்கும்.

கல்வியைப் பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்புப் பெற்றவர்களாக இருப்பார்கள். நுட்பமாகச் செயற்படுகிற கூர்மையான அறிவுடையவராக இருந்து வழிநடத்துவார்கள்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கல்வி இப்படித்தான் இருந்தது. கற்றவர்களைத் தேடிச் சென்று, கல்வி கற்று மக்கள் தங்களை உயர்த்திக் கொண்டார்கள். எழுத்தறிவு, எண்ணறிவு, பட்டறிவு, கை வேலைத்திறன், இசை, கூத்து, நுண்கலைகள் எனப் பல்வேறு கூறுகளில் உள் நுழைகிற கருத்துருக்கள் கற்பவருக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது \ உயர்த்தியது.

ஆளுபவரின் பிள்ளையாக இருந்தால் கூட ஆசிரியருக்கு முன் அவர் ஒரு மாணவர்தான். ஆசிரியருக்குப் பணிவிடை செய்துதான் அவர் கற்றுக் கொண்டார். பொருளை விட மதிப்பும் மரியாதையும் மேலெழுந்து நின்றன. பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஆசிரியர் கருதப்பட்டார். மக்களின் வணக்கத்திற்குரியவராக ஆசிரியர் இருந்தார்.

இதற்குப் பின் வந்த காலங்களில்.....

வேதத்தைக் கேட்டால், கேட்ட காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்ன ஆசிரியர்கள் தோன்றினார்கள்.

கட்டைவிரலைக் குரு தட்சணையாகக் கேட்ட ஆசிரியரும், மறுப்பேதும் கூறாமல் வெட்டித் தந்த மாணவரும் இருந்தனர்.

கை கட்டி, வாய் புதைத்து, அடங்கி ஒடுங்கி, பணிவுடன் பிரணவ மந்திரத்திற்கான பொருளை முருகனிடம் சிவன் கேட்டு நிற்பதையும், மாணவர்கள் இப்படித்தான் அடங்கி ஒடுங்கி - கற்க வேண்டும் என்பதையும் சூழல் காட்டியது.

சாதி, குலம், வருணம், ஏழை, பணக்காரன் - என்பவை உள்நுழைந்து கற்பவருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஒரு பெரிய தடைக் கல்லை உருவாக்கியது. ஒரு பிரிவினர் ஓரங்கட்டப் பட்டனர். கல்வி ஒரு சிலருக்கு எட்டாக் கனி ஆனது.

இன்றைய சூழலில்.....

அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம், பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகளால் - கல்வி என்பதற்கான கருத்துருக்களை வெகுவாக மாற்றியுள்ளன.

அறிவு நுட்பத்திற்கான அடித்தளமாக இருந்த கல்வி இன்றைய சூழலில் அந்த நிலையிலிருந்து மாறி, பொருளீட்டுகிற \ வணிகத்திற்கான படிக்கட்டுகளாக மாறியுள்ளது. பெருகி வரும் மக்கட்தொகைக்கு ஏற்றவாறு கல்வியானது வடிவமைக்கப்பட்டு, பொருள்வழிப் பெருகின்ற வணிகப் பொருளாக, கல்வி மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் விற்பனையாளராக மாறி விற்பனை செய்கின்றனர். பொருளீட்டுகின்றனர். இடைத் தரகர்களும் ஆசிரியர்களை கூலிக்கு அமர்த்தி விளம்பரம் செய்து விற்பனையைக் கூட்டுகின்றனர்.

சுதந்திரம் அடைந்த பிறகு....



கல்வி மைய அரசின் நேரடிப் பார்வையில் உள்ளது எனவும், கல்வியில் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் மைய அரசின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும் எனவும் விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயது வரை கல்வியைத் தரமாகவும், இலவயமாகவும், கட்டாயமாகவும் தரவேண்டியது அரசின் கடமை என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. 

ஆனால் இன்றைய சூழலில் தொடக்கக் கல்விக்கே பெரும் பொருள் செலவு செய்ய வேண்டியுள்ளது. கல்வி தனியாருக்கான பொருளீட்டும் வழிகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யலாம்.

ஆங்கிலேயன் ஆண்ட பொழுது அவர்களுக்கு உதவுகிற எழுத்தர் வேலைக்காக மெக்காலேயால் அன்றைய கல்வி முறை வடிவமைக்கப்பட்டது. ஆங்கிலேயன் சென்ற பிறகும் கூட ஆங்கிலமும், கல்வி முறையும் இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உளவியல் அறிஞர்களும், கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்திய போதும் இன்றும் இங்குள்ள பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால், மழலையர்கள் ஆங்கிலக் கல்வியில் மூழ்கி எழுகிறார்கள். தெளிவான புரிதலுக்கும் நுட்பமான செயற்பாடுகளுக்கும் தாய்மொழிக் கல்வியே சிறந்தது, அதுவும் தொடக்க நிலைகளில் அதுவே கட்டாயமானது என்ற கருத்துருக்கள் இங்கே ஏட்டளவில்தான் இருக்கின்றன. இதை உணர்ந்து செயற்படுகிற பெற்றோர்களோ, கல்வியாளர்களோ, அதிகாரிகளோ இங்கு இல்லை.

இன்றைய சூழலில் கடந்த இருபது ஆண்டுகளாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, நாளிதழ்களிலும், மேடைகளிலும், அறிவிப்புகளிலும் அதிகமாகப் பேசப்படுகின்றன. கல்வியாளர் தவே அவர்களால் உருவாக்கிய குறைந்த பட்ச கற்றல் இலக்குகளைக்கொண்ட கல்விமுறை, கற்றலில் இனிமை, அனைவருக்கும் கல்வி, செயல்வழிக் கல்வி, படிப்பும் இனிக்கும் - இப்படிப் பல்வேறு பெயர்களில் கல்விக்கான அணுகுமுறைகளும், கற்றல் கற்பித்தல் வழி முறைகளும் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளன. சமச்சீர் கல்வி என்பதும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றன. மறுபுறம் ஆங்கிலவழி மழலையர் பள்ளிகள் புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை ஈடுகட்ட தமிழக அரசும் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை அறிமுகம் செய்கிறது. இந்த மாணவர்களின் வளர்ச்சி நிலையை இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்து பார்த்தால் தான் தெரியும்.

பொதுவாக இன்றைய சூழலில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 15 விழுக்காட்டினருக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை.

கல்வி என்பது மாணவர்களுக்கு அடிப்படை அறிவை தந்து அவர்களை ஆற்றலோடு வளர்த்த வேண்டும் என்பதே அறிஞர்களின் உள்ளக்கிடக்கை. இதனையே கல்வியாளர்களும், கல்விக்கூடங்களும், கல்வி அதிகாரிகளும், கல்வித் துறை சார்ந்த அனைவரும் நெஞ்சில் நிறுத்தி திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும். 

பொள்ளாச்சி நசன்

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...