ராம் வந்திருப்பதாக மனைவி சொன்னாள்
வாசலில் ராம் காத்திருந்தான் , அடிக்கடி வந்து பணம் வாங்கிட்டு போவான்
"உள்ளே வாடா"
"ஏதாவது சாப்பிட குடிக்க கொடு , குளிச்சுட்டு வரேன்" என்றேன் மனைவியிடம்
எப்ப வந்தாலும் ஏதாவது சாப்பிட கொடுக்காமல் இவனை திருப்பி அனுப்புவதில்லை நான்
வேளா வேளைக்கு சரியாக சாப்பிட மாட்டான்
நிறைய தடவை வயித்தை காய போட்ருவான்
"அவன் எப்ப வந்தாலும் நா இல்லேன்டாலும் வெறும் வயித்தோடு திருப்பி அனுப்பாதே அவனை" என்பேன் மனைவியிடம்
அவளும் என்ன இருக்கோ கொடுப்பாள் அவனும் எது கொடுத்தாலும் என் குழந்தைகளோடு ஜாலியா அரட்டை அடித்தபடியே சாப்பிட்டு போய்டுவான்
ராம் 20 வருட கால நண்பன்
எந்த வேலையையும் ஒழுங்கா செய்ய மாட்டான்
எந்த வேலையில் சேர்த்து விட்டாலும் ஆறே மாசத்துல ஏதாவது ஒரு சாக்கு சொல்லி நின்றுவான்
காரணம் நியாயமாகத்தான் இருக்கும்
ஊரில் வேறு யார் வீட்டுக்கும் போக மாட்டான்
வரும் போது என் குழந்தைகளுக்கு அவனால் முடிந்த ஏதாவது வாங்கி வருவான்
பல தடவை சத்தம் போட்ருக்கேன்
"ஒன்னை யார்ரா இதுலாம் வாங்கிட்டு வரச்சொன்னது" என்பேன்
"வேலைய பார்ரா" என்பான்
நேற்று கொஞ்சம் வேகமாக வந்தான்.
"கொஞ்சம் பத்து ரூபா அவசரமா வேணும்டா" என்றான்
எப்போதும் அவன் காரணம் சொன்னதில்லை
பலமுறை நானும் கேட்டதில்லை
500,1000 தான் கேட்பான் இந்த ட்ரிப் அதிகம் கேட்கிறான்
"அவ்ளோ பணம் என்ட்ட இப்ப இல்லைடா"
"சரிடா அப்புறம் பாத்துக்கலாம்" ன்னு போய்ட்டான்
எனக்கு ஒரு மாதிரி உறுத்தலாகவே இருந்தது
நாளைக்கு அவன் கேட்ட பணத்தை கொடுத்துடணும்
மறுநாள் அய்யப்பேட்டை போகும் வேலை வந்தது
அங்கு போன பிறகுதான் ரகு ஞாபகம் வந்துச்சி
ராம் போல ரகுவும் நண்பன்தான்
ஒரே கிளாஸ் , ஒரே பெஞ்சு
அவனை பார்த்துட்டு வரலாமே
ரகு பெரிய ஆளாய்ட்டான்
அரசியல்வாதி மாதிரி ஆய்ட்டான்
மனைவியை அறிமுகப்படுத்தி வச்சான்
"அடிக்கடி ஓங்கள பத்தி சொல்லுவாரு" ன்னு அவன் மனைவி சொல்ல ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு
சாப்பிட்டு போக சொன்னான்
சரியென ஒப்புக்கொண்டேன்
பெரிய வீடு
நிறைய காசு பணம் புலங்குவதாக தோணுச்சு
ராம் பணம் கேட்டானே இவன்கிட்ட கேட்போமா
நட்புக்குள்ள என்ன ஒளிவு மறைவு
"மாப்ளே ,, ஒரு அய்யாயிரம் இருந்தா கொடேன் ,, அடுத்த ட்ரிப் பார்க்கும்போது எப்படியாவது தரேன்" என்றேன்
"சாப்டு சாப்டு ,, தரேன்" என்றான்
பத்தாக கேட்ருக்கலாமோ
பரவால்ல இது போதும்
நாம 5 போட்டு கொடுத்துடலாம்
எல்லாம் பேசினோம்
பண்ணெண்டாவது படிக்கும்போது விஷாலிக்காக நாங்க அடித்துக்கொண்டதை பேசி பயங்கரமா சத்தம்போட்டு சிரித்துக்கொண்டோம்
"படுத்து நாளைக்கு போயேன்டா" என்றான்
"வேணாம் மாப்ளே , பரவால்ல ,, அடுத்த தடவை பாத்துக்கலாம்"
என்றேன் ,,
" இல்லை லேட்டாயிடுச்சு பேசாம காலைலயே போ"
மறுநாள்
ஒருவழியா புறப்பட இருந்தப்ப கையில் கொஞ்சம் பணம் வைத்து திணித்தான்
"வச்சுக்க இதை ,, பாத்துக்கலாம்" என்றான்
எண்ணி பார்த்தேன் ஒரு ஆயிரம் இருந்தது
"என்னடா இது ,, அஞ்சு கேட்டேன் ,, ஒண்ணு தந்துருக்கே" என்றேன்
"வச்சுக்க வச்சுக்க ,, பாத்துக்கலாம்" என்றான்
வந்து விட்டேன்
அதை திருப்பி கொடுக்க தெரியலை
ஆயிரம் ரூபா இல்லாம நா உங்கிட்ட வரலை ரகு ன்னு சொல்லி இருக்கலாம்
அந்த ஐயாயிரம் கூட டமால் ன்னு கேட்டது தான்
பணம் வாங்க அவனை தேடி போகலை
அவன் அளவுக்கு நானும் நல்லாதான் இருக்கேன்
ஆயிரம் இல்லாதவனாக என்னை நினைச்சுட்டானோ
திருப்பி கொடுத்தா அசிங்கமாய்டும்
பணத்துக்காகத்தான் வந்தீயா ன்னு நினைச்சிட்டான்னா
அய்யோ நான் எப்படி அவனுக்கு புரிய வைப்பேன்
இந்த ஒரு ஆயிரம் க்காக உன்னை தேடி வரலை ரகு
ரகு வை விட எந்த விதத்திலும் நான் குறைந்தவனில்லை
படிப்பிலும் சரி , பொருளாதாரத்திலும் சரி ,, நான் பணத்துக்காக ரொம்ப அலைகிறேன் என நினைச்சுட்டானோ
ஆயிரம் தருவான் என சத்தியமா எதிர்ப்பார்க்கலை
உன்னிடம் இருக்கும் பணத்தில் ராம் க்கு உதவலாம் நினைச்சேன் டு எப்படி இவனுக்கு உணர்த்துறது ?! இருக்கட்டும்
இன்னொரு நாள் ராமை கூட்டி போய் வச்சுக்கலாம் கச்சேரி
நண்பன் தானே
ஊர் இறங்கியதும் ராம் வீட்டு வாசலில் செம கூட்டம்
என்னாச்சு
"ஏதோ வயித்து வலியாம் , தாங்க முடியலை , டாக்டர் ட போக காசு இல்லை ,, ராத்திரி வலி தாங்க முடியாம தூக்கு போட்டுக்கிட்டார்" பொட்டிக்கடை ரஹீம் பாய் தான் சொன்னார்
வேகவேகமாக வீட்டுக்கு போனேன் ,, உள்ளே இருந்து வந்த மனைவி சொன்னாள்
"எவ்ளோ நேரம் , நேத்தே வருவீங்கன்னு நெனச்சேன் , நேத்து ராம் வந்திருந்தார் ,, நாள் பூரா வெயிட் பண்ணார் ,, பாவம் பணத்துக்காக வந்துருப்பார் போல ,, ரொம்ப நேரமாச்சு ,, நாளைக்கு வரேன்னு சோகமாத்தான் போனார்" என்றாள் ,,,
" என்னங்க என்னாச்சு ஒங்களுக்கு ,, " மனைவி கத்த ,, வீடு கதற ,, பூமி இரண்டாக பிளந்து
என்னை இழுத்துக்கொள்வதாக உணர்ந்தேன் !
இவண் ;- அன்சாரி மஸ்தான்
வாசலில் ராம் காத்திருந்தான் , அடிக்கடி வந்து பணம் வாங்கிட்டு போவான்
"உள்ளே வாடா"
"ஏதாவது சாப்பிட குடிக்க கொடு , குளிச்சுட்டு வரேன்" என்றேன் மனைவியிடம்
எப்ப வந்தாலும் ஏதாவது சாப்பிட கொடுக்காமல் இவனை திருப்பி அனுப்புவதில்லை நான்
வேளா வேளைக்கு சரியாக சாப்பிட மாட்டான்
நிறைய தடவை வயித்தை காய போட்ருவான்
"அவன் எப்ப வந்தாலும் நா இல்லேன்டாலும் வெறும் வயித்தோடு திருப்பி அனுப்பாதே அவனை" என்பேன் மனைவியிடம்
அவளும் என்ன இருக்கோ கொடுப்பாள் அவனும் எது கொடுத்தாலும் என் குழந்தைகளோடு ஜாலியா அரட்டை அடித்தபடியே சாப்பிட்டு போய்டுவான்
ராம் 20 வருட கால நண்பன்
எந்த வேலையையும் ஒழுங்கா செய்ய மாட்டான்
எந்த வேலையில் சேர்த்து விட்டாலும் ஆறே மாசத்துல ஏதாவது ஒரு சாக்கு சொல்லி நின்றுவான்
காரணம் நியாயமாகத்தான் இருக்கும்
ஊரில் வேறு யார் வீட்டுக்கும் போக மாட்டான்
வரும் போது என் குழந்தைகளுக்கு அவனால் முடிந்த ஏதாவது வாங்கி வருவான்
பல தடவை சத்தம் போட்ருக்கேன்
"ஒன்னை யார்ரா இதுலாம் வாங்கிட்டு வரச்சொன்னது" என்பேன்
"வேலைய பார்ரா" என்பான்
நேற்று கொஞ்சம் வேகமாக வந்தான்.
"கொஞ்சம் பத்து ரூபா அவசரமா வேணும்டா" என்றான்
எப்போதும் அவன் காரணம் சொன்னதில்லை
பலமுறை நானும் கேட்டதில்லை
500,1000 தான் கேட்பான் இந்த ட்ரிப் அதிகம் கேட்கிறான்
"அவ்ளோ பணம் என்ட்ட இப்ப இல்லைடா"
"சரிடா அப்புறம் பாத்துக்கலாம்" ன்னு போய்ட்டான்
எனக்கு ஒரு மாதிரி உறுத்தலாகவே இருந்தது
நாளைக்கு அவன் கேட்ட பணத்தை கொடுத்துடணும்
மறுநாள் அய்யப்பேட்டை போகும் வேலை வந்தது
அங்கு போன பிறகுதான் ரகு ஞாபகம் வந்துச்சி
ராம் போல ரகுவும் நண்பன்தான்
ஒரே கிளாஸ் , ஒரே பெஞ்சு
அவனை பார்த்துட்டு வரலாமே
ரகு பெரிய ஆளாய்ட்டான்
அரசியல்வாதி மாதிரி ஆய்ட்டான்
மனைவியை அறிமுகப்படுத்தி வச்சான்
"அடிக்கடி ஓங்கள பத்தி சொல்லுவாரு" ன்னு அவன் மனைவி சொல்ல ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு
சாப்பிட்டு போக சொன்னான்
சரியென ஒப்புக்கொண்டேன்
பெரிய வீடு
நிறைய காசு பணம் புலங்குவதாக தோணுச்சு
ராம் பணம் கேட்டானே இவன்கிட்ட கேட்போமா
நட்புக்குள்ள என்ன ஒளிவு மறைவு
"மாப்ளே ,, ஒரு அய்யாயிரம் இருந்தா கொடேன் ,, அடுத்த ட்ரிப் பார்க்கும்போது எப்படியாவது தரேன்" என்றேன்
"சாப்டு சாப்டு ,, தரேன்" என்றான்
பத்தாக கேட்ருக்கலாமோ
பரவால்ல இது போதும்
நாம 5 போட்டு கொடுத்துடலாம்
எல்லாம் பேசினோம்
பண்ணெண்டாவது படிக்கும்போது விஷாலிக்காக நாங்க அடித்துக்கொண்டதை பேசி பயங்கரமா சத்தம்போட்டு சிரித்துக்கொண்டோம்
"படுத்து நாளைக்கு போயேன்டா" என்றான்
"வேணாம் மாப்ளே , பரவால்ல ,, அடுத்த தடவை பாத்துக்கலாம்"
என்றேன் ,,
" இல்லை லேட்டாயிடுச்சு பேசாம காலைலயே போ"
மறுநாள்
ஒருவழியா புறப்பட இருந்தப்ப கையில் கொஞ்சம் பணம் வைத்து திணித்தான்
"வச்சுக்க இதை ,, பாத்துக்கலாம்" என்றான்
எண்ணி பார்த்தேன் ஒரு ஆயிரம் இருந்தது
"என்னடா இது ,, அஞ்சு கேட்டேன் ,, ஒண்ணு தந்துருக்கே" என்றேன்
"வச்சுக்க வச்சுக்க ,, பாத்துக்கலாம்" என்றான்
வந்து விட்டேன்
அதை திருப்பி கொடுக்க தெரியலை
ஆயிரம் ரூபா இல்லாம நா உங்கிட்ட வரலை ரகு ன்னு சொல்லி இருக்கலாம்
அந்த ஐயாயிரம் கூட டமால் ன்னு கேட்டது தான்
பணம் வாங்க அவனை தேடி போகலை
அவன் அளவுக்கு நானும் நல்லாதான் இருக்கேன்
ஆயிரம் இல்லாதவனாக என்னை நினைச்சுட்டானோ
திருப்பி கொடுத்தா அசிங்கமாய்டும்
பணத்துக்காகத்தான் வந்தீயா ன்னு நினைச்சிட்டான்னா
அய்யோ நான் எப்படி அவனுக்கு புரிய வைப்பேன்
இந்த ஒரு ஆயிரம் க்காக உன்னை தேடி வரலை ரகு
ரகு வை விட எந்த விதத்திலும் நான் குறைந்தவனில்லை
படிப்பிலும் சரி , பொருளாதாரத்திலும் சரி ,, நான் பணத்துக்காக ரொம்ப அலைகிறேன் என நினைச்சுட்டானோ
ஆயிரம் தருவான் என சத்தியமா எதிர்ப்பார்க்கலை
உன்னிடம் இருக்கும் பணத்தில் ராம் க்கு உதவலாம் நினைச்சேன் டு எப்படி இவனுக்கு உணர்த்துறது ?! இருக்கட்டும்
இன்னொரு நாள் ராமை கூட்டி போய் வச்சுக்கலாம் கச்சேரி
நண்பன் தானே
ஊர் இறங்கியதும் ராம் வீட்டு வாசலில் செம கூட்டம்
என்னாச்சு
"ஏதோ வயித்து வலியாம் , தாங்க முடியலை , டாக்டர் ட போக காசு இல்லை ,, ராத்திரி வலி தாங்க முடியாம தூக்கு போட்டுக்கிட்டார்" பொட்டிக்கடை ரஹீம் பாய் தான் சொன்னார்
வேகவேகமாக வீட்டுக்கு போனேன் ,, உள்ளே இருந்து வந்த மனைவி சொன்னாள்
"எவ்ளோ நேரம் , நேத்தே வருவீங்கன்னு நெனச்சேன் , நேத்து ராம் வந்திருந்தார் ,, நாள் பூரா வெயிட் பண்ணார் ,, பாவம் பணத்துக்காக வந்துருப்பார் போல ,, ரொம்ப நேரமாச்சு ,, நாளைக்கு வரேன்னு சோகமாத்தான் போனார்" என்றாள் ,,,
" என்னங்க என்னாச்சு ஒங்களுக்கு ,, " மனைவி கத்த ,, வீடு கதற ,, பூமி இரண்டாக பிளந்து
என்னை இழுத்துக்கொள்வதாக உணர்ந்தேன் !
இவண் ;- அன்சாரி மஸ்தான்
No comments:
Post a Comment