யானை ஒன்று குளித்து விட்டு மிகவும் சுத்தமாக வந்துக்கொண்டிருந்தது.
ஒரு ஒடுக்கமான பாலத்தில் அதில் வரும் போது எதிரே சேற்றில் குளித்து விட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொன்டே வந்தது.
யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழிவிட்டது. அந்த பன்றி எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம் பார்த்தாயா அந்த யானை என்னை பார்த்து பயந்து விட்டது என்று சொல்லி சிரித்தது.
அந்த யானையை பார்த்து இன்னொரு யானை, அப்படியா! நீ பயந்து விட்டாயா? என்று கேட்டது.
அதற்கு யானை தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி இருக்கும். மேலும் பன்றியின் சேறு என் மீது விழுந்து நானும் அசுத்தமாகி இருப்பேன். இந்த காரணங்களால் நான் ஒதுங்கி கொண்டேன் என்றது.
தன் பலம்,பலவீனம் தெறித்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
குறள்:
"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்"
"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்"
குறள் விளக்கம்:
அடக்கம்= அழியாத புகளை கொடுக்கும்
அடங்காமை = வாழ்வையே இருளாக்கி விடும்
அடக்கம்= அழியாத புகளை கொடுக்கும்
அடங்காமை = வாழ்வையே இருளாக்கி விடும்
-- அசாருதீன்
No comments:
Post a Comment