Wednesday, 5 October 2016

சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!

 சிறு நீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடுப்பது மிகவும் முக்கியமாகும். அப்படி இல்லையென்றால் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்வது இயலாமல் போய்விடும். தீவிரமான சிறுநீரக பிரச்னைகளை குறைக்க ஒருசில அறிகுறிகள் தெரிந்தாலே உங்கள் மருத்துவரை அணுகுங்கள். சீக்கிரமே கண்டுபிடித்தல் சிறுநீரக நோய்களுக்கு சிறப்பாக சிகிச்சை  அளித்துவிடலாம்.




சிறுநீரக செயல்பாட்டில் மாற்றங்கள்:-
சிறுநீரக நோயின் முதல் அறிகுறியே சிறுநீர் வெளியேறும் அளவிலும், அதனை எதனை முறை கழிக்கிறோம் என்ற விதத்தில் ஏற்படும் மாற்றம். சிறுநீர் அளவு கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம். அதே போல் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை விதமும் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம். அதுவும் முக்கியமாக இரவு நேரத்தில்  தான்  இந்த மாற்றங்களை உணரலாம். அதில் சிறுநீரின் நிறமும் அடர்ந்த நிறத்தில் இருக்கலாம் அல்லது அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் ஏன தோன்றும் அனால் எதுவுமே வராது.


சிறுநீர் கழிக்கும் பொது கஷ்டப்படுவது அல்லது வலி ஏற்படுவது:-
சில நேரம் சிறுநீர் கழிக்கையில் கஷ்டப்படலாம் அல்லது அழுத்தத்தை உணரலாம் அல்லது வலி ஏற்படலாம். சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டால் சிறு நீர் கழிக்கையில் வலி அல்லது எரிச்சல் தன்மை உண்டாகும். இந்த தொற்றுக்கள் சிறுநீரகங்களுக்கு பரவினால் காய்ச்சல் உண்டாகி பின்பக்கம் வலி உண்டாகும்.


சிறுநீரில் ரத்தம்:- 
இது சிறுநீரக நோயின் அறிகுறியாகும். கண்டிப்பான முறையில் இது சிறுநீரக நோயையே குறித்தாலும் கூட சில நேரத்தில் வேறு காரணமும் கூட இருக்கலாம். அதனால் ஏதேனும் ஏற்பட்டால் உங்கள் முறுத்துவரை உடனே அணுகுவது நல்லது.


வீக்கம்:- 


உடலில் உள்ள கழிவுகள் மற்றும் கூடுதல் நீர்மத்தை அகற்றுவதே சிறுநீரகத்தின் வேலை. அதனை அவையால் செய்யமுடியவில்லை என்றால் இந்த கூடுதல் நீர்மம் குவிந்து கொண்டே சென்று அதனால் கைகள், கால்கள், முகம் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படும்.


தீவிரமான சோர்வு மற்றும் பொதுவான அயர்ச்சி:-


 எரித்ரோபோய்டின் என்ற ஹார்மோனை சீறுநீரகம் சுரக்கிறது. இது ரத்த சிவப்பணுக்களை ஆக்ஸிஜன் கொண்டு செல்ல உதவும். சிறுநீர் னாய் ஏற்பட்டால்  எரித்ரோபோய்டின் சுரப்பது குறைந்து போய்விடும். இதனால் உங்கள் உங்கள் ரத்த சிவப்பணுக்கள் குறைந்து விடும். இதன் மூலம் ரத்த சோகை ஏற்படும். இதன் காரணமாக அணைத்து அணுக்களுக்கும் ஆக்ஸிஜன் குறைவாக செல்லும். அதனால் தான் பொதுவாக அயர்ச்சியும் சோர்வும் ஏற்படுகிறது.


மயக்க உணர்வு மற்றும் ஒருமுகப்படுத்துவதில் இயலாமை:-
சிறுநீரக நோயுடன் தொடர்புடைய ரத்த சோகை உங்கள் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனை வெறுமையாக்கும். இதனால் மயக்க உணர்வு மற்றும் ஒருமுகப்படுத்துவதில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.


எப்போதும் குளிர்வது:- 
உங்களுக்கு உந்த நோய் இருந்தால் வெதுவெதுப்பான சூழ்நிலையிலும் கூட சோகை இருப்பதால் எப்போதும் குளிராகவே இருக்கும். சிறுநீரக தொ ற்று இருந்தால் குளிர் காய்ச்சல் ஏற்படும்.


சருமத்தில் சொறி மற்றும் அரிப்பு ஏற்படும்:-
உங்கள் சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போனால் உங்கள் ரத்தத்தில் கழிவுகள் குவியும் இதனால் சருமத்தில் தீவிரமான சொறிகளும் அரிப்புகளும் ஏற்படும்.


அமோனியா மூச்சி மற்றும் மெட்டாலிக் சுவை:-
சிறுநீரகம் சரியாக செயல் படவில்லை என்றால் ரத்தத்தில் உள்ள யூரியா அளவு அதிகரித்து விடும். இந்த யூரியா நம் எச்சிலில் அமோனியாவாக உடையும். இது மூச்சி காற்றை சிறுநீர் போன்ற கெட்ட வாடையாக மாற்றும். இதனை அமோனியா மூச்சி என்பார்கள். இதனால் வாயில் எப்போதும் எரிச்சலை ஏற்படுத்தும் மெட்டாலிக் சுவை உண்டாகும்.


குமட்டல் மற்றும் வாந்தி:-
சிறுநீரக நோய் இருந்தால் ரத்தத்தில் உள்ள கழிவு பொருட்கள் குவிந்து கொண்டே போகும் இதனால் குமட்டலும் வாந்தியும் ஏற்படும்.


மூச்சி விடுவதில் சிரமம்:-
சிறுநீரக னாய் இருந்தால் நுரைஈரலில் நீர்மம் சேர்ந்து விடும். மேலும் சிறுநீரக நோயினால் ஏற்படும் பொதுவான பக்க விளைவான ரத்த சோகை ஏற்படும். இதனால் உடலுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை இதன் விளைவாக மூச்சி விடுவதில் சிரமமா ஏற்படும்.


முதுகு மற்றும் இரு பக்கங்களிலும் வலி:-


சிறுநீரக இருந்தால் சில நேரங்களில் வலி ஏற்படும். சிறுநீரக குழாயில் கல் இருந்தால் கீழ் முதுகில் ஆரம்பித்து கவட்டை வரை தீவிரமாக வலி ஏற்படும். லிசிஸ்டிக் என்ற சிறுநீரக மரபு நோய் இருந்தாலும் கூட வலி ஏற்படும். இதனால் சிறுநீரகத்தில் நீர் நிறைந்த பல கட்டிகள் உருவாகும். நீர்ப்பை சுவர்களில் திசு இடைநார் சிறுநீர்ப்பை அலர்ஜி என்ற தீவிரமான அலர்ஜி ஏற்படும் பொது தீவிரமான வழியும் சுகவீனமும் ஏற்படும்.





No comments:

Post a Comment

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...