என் நண்பன் "ரமலான் னா என்னடா" னு கேட்டான், புரியுற மாதிரி சிம்பிளா பதிவாகவும் போட சொன்னான்.
ரமலான் னா பிரியாணி, பசி, பட்டினி அப்படி னு என்னவெல்லாம் கற்பனை பண்ணியிருந்தீங்களோ, எல்லாத்தையும் அழிச்சிருங்க.
"ரமலான்" ங்குறது ஒரு மாசத்துடைய பெயர் அவ்ளோதான்.
அந்த மாதத்தின் ஆரம்பத்தில் நோன்பு பிடிச்சு இறுதியில் நோன்பை முடிச்சு நோன்பு பெருநாளை கொண்டாடுவது தான் "ரமலான்"
சும்மா நோன்பு பிடித்து சாப்பிடாம, தண்ணி குடிக்காம பசித்து கெடக்குறதுல இறைவனுக்கு என்ன லாபம்...?
ஒரு லாபமும் கிடையாது, எந்த ஒரு நன்மைகளையும் செய்யாம வணக்க, வழிபாடுகள் இல்லாம வெறும் பசித்து மட்டும் இருப்பதை இறைவன் ஏற்றுக்கொள்ளவே மாட்டான்.
நோன்பு என்பது ரமலான்ல ஒரு பகுதி, அதாவது ஓட்டப்பந்தயத்துல shoe போட்டு ஓடுற மாதிரி, அதுதான் விதிமுறை, ஓடுவதற்கு சுலபமும் கூட.
அதேபோல தான் ரமலான்ல நோன்பும்.
ரமலானின் முக்கிய நோக்கம் நன்மையான செயல்கள் செய்வது தான், அந்த செயல்கள் நோன்பு மூலம் பயணிக்கும்..
நம்மள மறந்து எந்த ஒரு தீமையான அனாவசியமான செயல்களை செய்ய முனையும்போதும் நோன்பினால் ஏற்பட்ட பசியும், உடல் சோர்வும் நோன்புல இருக்கோம்ங்குறதை நியாபகப்படுத்தும், அப்போவே அதை செய்யாம தவிர்த்திருவோம்.
ஒரு வேளை உணவு கூட கிடைக்காத ஏழை எளிய மக்களோட கஷ்ட்டத்தை உணர்ந்தாலே தன்னால உதவ மனம் வந்துரும். இந்த நோன்பின் மூலம் பசின்னா என்ன னு உணர முடியும்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பிராதன நோக்கம் இறையச்சமே, ரமலான் மாதத்தில் நிறைய நன்மைகள் செய்யனும், தீமையான காரியங்களில் இருந்து விலகிக்கொள்ளனும், அதிகமா இறைவனை தொழுகனும், முக்கியமா தான தர்மங்கள் அதிகமாக செய்யனும்.. எல்லா இஸ்லாமியனும் தன்னுடைய செல்வத்துல இருந்து 2.5% தானமா கொடுக்கனும். இந்த மாதத்தில் இறைவனுக்கும் நமக்குமான உறவு பலமடங்கு பலப்படும், ஸ்பெசல் மாதம் னு கூட சொல்லலாம்,
இந்த மாசத்துல தான் இறைவன் நபி(ஸல்) அவர்கள் மூலமா உலக மக்களுக்கு குர்ஆனை அருளினான்..
சரி shoe போடாம ஓட முடியாதா..?
கண்டிப்பா ஓடலாம்.. ஆனால் எல்லோருக்கும் இல்லை.. ஏற்கனவே சொன்ன மாதிரி இது ஒரு விதிமுறை, அதில் சிலருக்கு விலக்கும் உண்டு.
நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், மாதவிடாய் பெண்கள், குழந்தைக்கு பாலூட்டும் பெண்கள், இவங்களுக்கு லாம் விலக்கு உண்டு..
அவங்களாம் நோன்பின்றி நன்மையான காரியங்களை அதிகமாக செய்யலாம்..
இதுதான் Basic நோன்பும், ரமலானும்..
No comments:
Post a Comment