சௌதி அரேபிய அரசு புதிதாக ஒரு வலை தளத்தை ஆரம்பித்துள்ளது. இவ்வலை தளம், வேலையை இழந்துள்ள, திறம் படைத்த, வேலை தேடும் வெளி நாட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சௌதி அரசு இரு தரப்பான நன்மையை எதிர் பார்க்கிறது.
ஒன்று, புதிய விசாக்கள் வழங்குவது குறையும்.
இரண்டு, இதனால், வேலை இழந்து தவிக்கும் தகுதி படைத்த வெளி நாட்டினர் வேலை பெறுவர்.
இது நிகாதத் திட்டத்தின் கீழ் பச்சை நிற தரம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே பயன் பெற உதவும். இதன் மூலம், அந்நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்குத் தேவையான வெளி நாட்டு வேலையாட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசின் செய்தித் தொடர்பாளர் அபா அல் கைல் தெரிவித்துள்ளார்.
இந்தப் பக்கத்தின் பெயர், கவாதிர் லேபர் (Kawadir Labor) என்பதாகும்.
https://www.kawadir.com.sa/en/jobs/companies/
https://www.kawadir.com.sa/en/employers/
No comments:
Post a Comment