Wednesday, 7 March 2018

பேருந்து பயணம்

அலாரம் அடித்தவுடன் அவசர அவசரமாகக் குளிச்சிட்டு, இரு சக்கர வாகனத்தில் புது பஸ்டான்ட் நிலையத்தை அடைந்தபொழுது காலை 6மணி, பைக் ஸ்டான்டட்ல வண்டிய நிருத்திட்டு.. சார் சைட்லாக் பண்ணாதீங்கன்னு அங்க இருந்த ஆள் சவுண்ட் குடுக்கஅதன்படி வண்டிய போட்டுட்டு

6:20க்கு  கும்பகோணம் போகும் point to point அரசு பஸ்ல ஏறினேன். உள்ளே ஏறி நோட்டம் விட்டதில் ஒரு மூன்று பேர் அமரும் இருக்கையில் நடுவிலே ஒரு இருக்கை காலியாக இருந்ததைக் கண்ட நான் அவசரமாக அதை நோக்கி நகர்ந்தேன், ஓரத்தில் அமர்ந்திருந்தவர் நடுவிற்கு நகர்ந்து எனக்கு ஓரத்தைத் தந்தார். பஸ் நிரம்பி வழிந்தது. பெண்கள் பட்டுப் புடவைகளிலும் ஆண்கள் ஜரிகை வேட்டிகளிலும் காட்சி தருவதிலிருந்து அன்று நல்ல முகூர்த்த நாள் என்பதும் வெல்லன முகூர்த்தம் என்பதும் தெளிவானது

நானும்  11மணிக்கு தஞ்சாவூரில் டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட் என்பதால்தான் அவ்வளவு சீக்கிரம் பஸ்ஸைப் பிடிக்க ஓடி வந்தேன்
எப்பொழுதும் போனை நோண்டும் நான் இந்தமுறை அதை செய்யாமல் சற்று நோட்டம்விட்டேன் தெரிந்த முகம் ஏதாவதுள்ளதா என்று, ஆனால் தெரிந்தவர்கள் யாரும் இல்லை
நான் சுற்றுமுற்றும் பார்க்க என் இடது பக்கத்திலிருந்த இரண்டு பேர் அமரும் இருக்கையில் வாட்டசாட்டமாக ஒருவர் வெள்ளைக் கதர் சட்டை வேட்டியில் அமர்ந்திருந்தார். மோண்ட பனை மரம் போலிருந்தவரது வெள்ளை ஆடைகள் அவரின் நிறத்தைச் சற்றுத் தூக்கலாகக் காட்டியது. நல்ல வெளிச்சத்தில்தான் அவர் வைத்திருக்கும் பெரிய மீசை யாரையும் பயமுறுத்தும். விரைப்பாக முழு இருக்கையையும் அடைத்துக் கொள்வது போல் உட்கார்ந்திருந்தார். அருகே ஒரு வயதானவர் பல்லி போல் ஜன்னலோடு ஒட்டிக் கொண்டிருந்தார்.

இப்போழுதெல்லாம் பஸ்ஸில் பயணம் பண்ணுவது மிகவும் கடினம். ஓரே சத்தந்தான். அங்கங்கு கைபேசிகளில் பலர் சத்தமாக பேசி சிரித்து அழுது சண்டைப் போட்டு ஆரவாரிப்பார்கள். பொது இடம் என்ற நினைவே இல்லாமல் வீட்டையே தெருவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். போதாதற்கு பஸ்காரர்கள் பாட்டுக்களை வேறு சத்தமாக வைத்துவிடுவார்கள். நாற்பது வயது தாண்டும் பொழுது எவருக்கும் சரியாகக் காது கேட்காத நிலைக்கு தள்ளி விடுவார்கள் என்பது நிச்சயம்.

விசில் ஊதிக் கொண்டே பின்வாசல் வழியாக கண்டெக்டர் ஏற முன் வாசல் வழியாக பட்டுப் புடவையில் ஒரு நடுத்தரவயதுப் பெண் ஏறி டிரைவர் அருகே ஏதாவது இருக்கை இருக்கா என்று கண்களைச் சுழட்ட கண்டெக்டர் பின்னால் ஒரு இருக்கையில் இரு பெண்கள் மட்டும் இருப்பதைப் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணிடம்
பின்னால் வாருங்கள் அம்மா! இடமிருக்கிறதுஎன்றார்.

எனக்குப் பின்னாடி வேண்டாம்என்றது அந்த அம்மா..

அப்படியா! ஒன்று செய்யுங்கள். முன்னால் டிரைவரை எழுப்பிவிட்டு உட்கார்ந்து கொள்ளுங்கள்என்றதும்..
எல்லோரும் கொல்லென்று சிரிக்க அந்தப் பெண் வெட்கி_கோபத்தோடு பஸ்ஸை விட்டு இறங்கப் பஸ் புறப்பட்டது

மிந்தின நாள் இரவு நல்ல மழை பெய்திருந்ததால் நல்ல குளிர். பஸ்ஸில் முக்கால்வாசி ஜன்னல்கள் கண்ணாடிகள் இழுத்துவிடப் பட்டு மூடப் பட்டிருந்தன
என் இடப்பக்கமிருந்த வயதானவரும் ஜன்னலைச் சாத்த முயற்சிக்க அந்தக் கதர் சட்டைக்காரர் காத்து வேணும் சாத்தக்கூடாது என்று தடுத்தார். வயதானவர் வாடைக் காற்று வீசுகிறது, குளிரும் அதிகமாக 
இருக்கிறது என்று சொல்ல, வேண்டுமானால் நான் ஜன்னலோரம் உட்கார்ந்து கொள்கிறேன் என்றார் கதர் சட்டை. வயதானவருக்கு தயக்கம். நான் பெரியவரிடம்இந்தப் பக்கம் வந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் சிரமமாக இருக்கும் என்றேன்வேறு வழியில்லாமல் இருக்கையில் உட்பக்கம் நகர்ந்து கிடைத்த கொஞ்ச இடத்தில் ஒட்டிக் கொண்டு வந்தார்.

பஸ் மாயுரம் பஸ்டேன்ட் வந்ததும் பலர் இறங்க முற்பட்டனர் எனது சீட்டில் உள்ளவர்களும் எழுந்து நகர்ந்தனர், அப்பொழுது நான் ஜன்னல் ஓரம் நகர்ந்தேன் திடீரென ஒரு கேரிபேக் வெளியில் இருந்து என் மேல் விழுந்தது, யாரோ இடம் பிடிப்பதற்காக அதை வீசி இருக்கலாம் என்றே உணர்ந்தேன். ஏம்பா இடம்பிடித்தது நான் அதில் நீ உக்காந்திருக்கிற என்று பையை போட்டவர் உரிமையுடன் கேட்க, இல்லை நான் இங்க ஏறவில்லை இதே பஸ்ஸிலதான் வர்ரேன் என்றேன், சாரி தம்பி மற்ற ஜன்னல் சாத்தி இருந்தது அதுக்குத்தான் இதில்போட்டேன் என்றபடி என் அருகே அமர்ந்தார்

காலேஜ், ஸ்கூல் பசங்கன்னு பஸ் பலபலவென்று நிரம்பி வழிந்தது, இடையில் இறங்குபவர்கள் ஏறாதீர்கள் என்று கன்டெக்டர் பலரை தடுத்தாலும்
இடையில் இறங்கும் மாணவர்களை அவர் ஏனோ தடுக்கவில்லை! அது அவர்மேல் ஓர் மரியாதையை கொண்டுசென்றது

கந்தலான கசங்கிய சீருடைகளில் 4 பள்ளி சிறுவர்கள், ஏனோ முனுமுனுத்து சிரித்து களாய்த்து அடுத்தநோடி என்னவாகும் என்ற எந்த கவலையுமின்றி அளாய்கடித்தனர். அவர்களின் சேட்டைகள் பஸ்ஸில் இருப்பவர்களை கவர்ந்தது!

ஆடுதுறையில் பாதிகூட்டம் இறங்க மீதி கூட்டம் ஏற.. அப்டியே நகர்ந்தது

பயணங்களில் ஏற்படும் தூக்கம் ஏனோ அனைவருக்கும் அதிகமாக வாய்பதில்லை, கண் அசந்த சற்று நிமிடங்களில் கும்பகோணம் பேருந்துநிலத்தை எட்டியது பஸ்

பல வண்ண-வர்ணங்களில் (தஞ்சாவூர்) புறப்பட தயாராக இருந்த தனியார் பேருந்தை நோக்கி நடந்தேன், சார் எங்கபோகனும் தஞ்சாவூரா என்ற நடத்துனரிடம் ஆமாம்! என்று தலைஅசப்பிற்க்கு முன்பே வண்டியில் ஏறி இருக்கையை காண்பித்தார்

பல இடங்கள் காலியாக இருந்தும் நமக்கான இடங்களை தேடிப்பிடித்து உட்காருவது சற்று குழப்பமாகவே அமையும், இருந்தும் சட்டென்று அமர்ந்து மீதம் உள்ள தூக்கத்தை தொடங்கவேண்டும் என்ற ஆசை, அதற்க்கு சற்றும் எதிர்பாராமல் இளையராஜா சாரும் வண்டியில் ஏறினார்
சில பாடல்கள் ஒருசிலருக்கு பலவித நியாபங்களை நினைவுபடுத்தும் அவ்வாறான பயணங்களுக்கு சிறந்த தோழன் இளையராஜா சார் பாடல் என்றால் அது மிகையாகாது.

மருத்துவமனையை அடைந்தேன் வியப்பூட்டும் பல அதிசய காட்சிகள், வந்த நோயாளிகளில் பாதிபேர் என் வயதுடைய நபர்கள்தான்.

ஆரோக்கியமாக வாழத்தான் உழைக்கிறோம் என்ற எண்ணத்தை மறந்து சரியான நேரத்தில் சாப்பிடாமல் வேலைசெய்பவர்கள்தான் அங்கு அதிகம்! நானும் அல்சர் பிரச்சினைக்காகதான் சென்றிருந்தேன்

செல்வத்தை சேமிப்பதற்காக ஆரோக்கியத்தை இழக்கிறோம், பிறகு ஆரோக்கியத்தை மீட்க செல்வத்தை அழிக்கிறோம்

பர்ஸ், வயிறு, வண்டி பெட்ரோல், மொபைல் பேலன்ஸ் இவை எல்லாம்  காலியானபின் நம்மிடம் எஞ்சி இருப்பது எதுவோ!அதுவே நிரந்தரம்!
அதுதான் நாம் செய்த தர்மமும், நமது 
ஆரோக்கியமும்! என்று என் அத்தா அடிக்கடி சொல்வார்

ஆம்! நாம் எதிர்காலத்தை மனதில் வைத்து நிகழ்காலத்தை வீணாக்குகிறோம், பிறகு எதிர்காலத்தில் நமது கடந்த காலத்தை நினைத்து வருந்துகிறோம்
மரணிக்கவே போவதில்லை என்பதுபோல் வாழுகிறோம், பிறகு வாழவே இல்லை என்பது போல் மரணித்து விடுகிறோம்

நமது வாழ்க்கை பயணம் மிக அழகானது அதை ரசித்து வாழ பழகுவோம்!

இம்தியாஸ் சவுக்கத் 













Monday, 26 February 2018

சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்காரியகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.


1. 
அநாதையைப் பொறுப்பேற்றல்:
"
அநாதையைப் பொறுப்பேற்றவரும்நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும்நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி).

2. 
கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்:
"
எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை'ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காதுஎன நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ).
 
ஆயத்துல் குர்ஸி:

"
அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).
اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأرْضَ وَلا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும்பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாதுஅவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும்பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன்மகத்துவமிக்கவன்.

3. 
வுழூச் செய்த பின் ஓதவேண்டியவை:
'உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூச் செய்து பின்பு:
أشهد أن لا اله الاالله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله
'
அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லைஅவன் தனித்தவன்அவனுக்கு எந்த இணையுமில்லை என்றும்முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரென்றும் தூதரென்றும் சான்று பகருகிறேன்) என்று சொல்வாரானால் அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன. அவர் விரும்பிய வாயிலால் நுழைய முடியும்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

4. 
அஸர் தொழுகையையும் சுபஹ் தொழுகையையும் தொடர்ச்சியாக தொழுது வருதல்:
'எவர் அஸர் தொழுகையையும்சுபஹ் தொழுகையையும் (பேணிப் பாதுகாத்து) தொழுது வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரிமுஸ்லிம்)

5. 
ஐவேளை தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருதல்:
"எவர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருவாரோ அல்லாஹ்விடத்தில் அவரை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் ஓர் உடன்படிக்கை இருக்கிறதுஎன நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்அபூதாவூத்நஸாஈ).

6. 
ஸலாத்தை பரப்புதல்:
"உங்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாத வரைசுவர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை விசுவாசம் கொண்டவராகக் கருதப்பட மாட்டீர். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை சொல்லித் தரட்டுமாஉங்களுக்கு மத்தியில் ஸலாத்தை அதிகமாகப் பரப்புங்கள்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

7. 
வுழூச் செய்த பின் இரண்டு ரக்அத் மனப்பூர்வமாகத் தொழுதல்:
'ஒரு முஸ்லிம் அழகான முறையில் வுழூச் செய்து உளப் பூர்வமாக இரண்டு ரக்அத் தொழுவாரானால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகி விட்டதுஎன நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

8. 
கல்வியைத் தேடல்:
"எவர் கல்வியைத் தேடி வெளியேறிச் செல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் பாதையை இலகு படுத்துகிறான்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

9. 
பெற்றோருக்கு நன்மை செய்தல்:
அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும்பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும்பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும். இறைத் தூதரிடம் அவர் யார் எனக் கேட்கப்பட்டது? "பெற்றோர்களின் இருவரையோ அவர்களின் ஒருவரையோ முதிய வயதில் அடைந்துபின்பு அவன் (அவர்கள் மூலம்) சுவர்க்கம் நுழையவில்லையானால் அவனேயாவான்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

10. 
நாவையும்மர்மப் பகுதியையும் பேணுதல்:
"எவர் இரு தாடைகளுக்கும்தொடைகளுக்கும் மத்தியில் உள்ளதை பாதுகாக்கிறேன் என பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தை பொறுப்பேற்றுக் கொள்கிறேன்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

11. 
முஅத்தீனின் அழைப்புக்கு மறுமொழி பகருதல்:
"முஅத்தீன் (அழைப்பாளர்) பாங்கு சொல்லும் போது அதை செவிமடுப்பவர் அதே போன்று சொல்ல் வேண்டும், 'ஹய்யஅலஸ் ஸலாஹ்ஹய்யஅலல் பலாஹ்என்று சொல்லும் போது மாத்திரம் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹிஎன்று சொல்ல வேண்டும்பின்பு முஅத்தீன் 'லா இலாஹ இல்லல்லாஹ்'என்று சொல்லும் போது யார் தூய உள்ளத்துடன் 'லா இலாஹ இல்லல்லாஹ்என்று பதில் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

12. 
ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருதல்:
"எவர் ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான். அவைகளாவன: லுஹருக்கு முன் 4ரக்அத்துகள்லுஹருக்குப் பின் 2 ரக்அத்துகள்மஃரிபுக்குப் பின் 2ரக்அத்துகள்இஷாவுக்குப்பின் 2 ரக்அத்துகள்பஜ்ருக்கு முன் 2ரக்அத்துகள்". (திர்மிதி)

13. 
அல்லாஹ்வின் 99 திருநாமங்களை மனனமிட்டு அதன்படி செயல்படுதல்:
"அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உள்ளன. எவர் அவைகளை மனனமிட்டு அதன்படி செயல்படுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

14. 
நான்கு விடயங்கள் ஒரு சேர பெற்று விட்டவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்:
"உங்களில் இன்று நோன்பு நோற்றவர் யார்என நபி (ஸல்) அவர்கள் குழுமியிருந்த தனது தோழர்களிடம் வினவினார். அபூபக்ர் (ரலி) அவர்கள் அதற்கு நான் என்றார்கள். இன்று உங்களில் நோயாளியை சுகம் விசாரிக்க சென்றது யார்என அன்னார் வினவினார்அதற்கும் நான் என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்று உங்களில் ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்என அன்னார் கேட்டபோதுஅதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்று உங்களில் ஏழைகளுக்கு உணவளித்தவர் யார்என அன்னார் கேட்டார்அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். எவருக்கு மேற் கூறப்பட்ட இவ்விடயங்கள் ஒரே நாளில் ஒரு சேர கிடைத்துவிடுமோ அவர் சுவர்க்கத்தில் நுழைந்து விடுவார்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

15. 
இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்:
"முஆதே! எவர் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

16."
லா இலாஹ இல்லல்லாஹ்வை உளத்தூய்மையுடன் மொழிதல்:
"எவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதை உளத்தூய்மையுடன் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

17. 
எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் நுழைவர்:
"நபி (ஸல்) அவர்கள்: எனது சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையும்தண்டனையுமின்றி சுவர்க்கம் நுழைவார்கள் எனக் கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். அங்கிருந்தோர் தங்களுக்குள் அந்த எழுபதாயிரம் பேர் நபியோடு தோழமை கொண்டு இருந்தவர்கள்மற்றும் சிலர் இல்லை அவர்கள் இஸ்லாத்தில் பிறந்து அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காதவர்கள். வீட்டைவிட்டு வெளியில் வந்த நபி (ஸல்) அவர்கள் நீங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்க நடந்தவைகளைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் அந்த எழுபதாயிரம் பேர்:
மந்திரித்துப் பார்க்காதவர்கள்மந்திரித்துப் பார்க்குமாறு கோராதவர்கள்பறவை சாஸ்த்திரம் பார்க்காதவர்கள் முழுமையாக அல்லாஹ்வையே சார்ந்திருக்கக் கூடியவர்கள் எனக் கூறினார்கள். அங்கிருந்த ஒருவர் எழுந்து நபியே நானும் அவர்களுடன் இருக்க பிரார்த்தியுங்கள்நீரும் அவர்களுடன் இருப்பீர் எனக் கூறினார்கள். மற்றொருவர் எழுந்து தனக்கும் பிரார்த்திக்குமாறு வேண்டினார்அதற்கு நபியவர்கள் "உக்காஷா"உம்மை முந்திவிட்டார் எனக்கூறினார்கள். (முஸ்லிம்).

"
நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன. அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்" (குர்ஆன் 8:107,108).

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...